நாளைய இயக்குனர் இறுதிப்போட்டிக்குமுன்





நண்பர்களே நாளைய இய
க்குனர் நிகழ்ச்சியில் இறுதிப்போட்டிவரை வந்துவிட்டேன்.
இதுவரை வந்ததில் கற்றதும், பெற்றதும் ஏராளம்.


ஒவ்வொருமுறையும் திருப்பூரிலிருந்து
அடித்து பிடித்து சென்னை செல்வது
சிரம்மாக இருந்த்தாலும் சுகமா அனுபவம்தான்.



நாளைய
இயக்குனர் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளாமல் இருந்திருந்தால் சென்னை எனக்கு இ
ன்னும் அந்நியமாகவே இரு
ந்த்திருக்கும்.

எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் சார் அவர்கள் எழுதியிருந்த்ததுபோலவே சென்னை செல்லும் இல்லமற்ற யாவரும் எதிர்கொள்ளும் தலையாய பிரச்சனையான கழிப்பதும், குளிப்பதும்

நானும் அதை எதிர்கொண்டேன். அப்புறம், இசையமைத்துக்கொடுத்த நண்பர் வசந்த் அறிமுகத்தால் தங்குமிடம் பிரச்சனை தீர்ந்தது அதற்குப்பின்னர் தற்போது எடிட்டர் ஜோமின் அறை வேடந்தாங்கலாக இருக்கிறது.

ஆரம்ப நாட்களின் சக போட்டியாளர்களுடன் சகஜமாக பேசமுடியவில்லை.
நிகழ்ச்சி முடிந்த்ததும் அவசர அவசர
மாக திருப்பூர் கிளம்பிவந்துவிடுவதாலும் இரண்டு மூன்று சுற்றுவரையிலும் சக போட்டியாளர்கள் யாராரென்றுகூட தெரிந்துகொள்ள முடியவில்லை.


அரையிருதி சுற்று முடிந்த்ததும்தான் எல்லோருடனும் நல்ல பரிச்சயம் ஏற்பட்டது.

இப்போது இறுதிப்போட்டிக்கு நுழையும் பத்து போட்டியாளர்களுமே நண்பர்களாக ஆகிவிட்டார்கள்
(நான்,ராம்,அருண்,ராகேஷ்,ரமேஸ்,கல்யாண்)


1.ராம் -- நீண்டகால நண்பர்களாக இருக்கிறோம்.
நான் பார்த்தவரையில் ராம் எதையும் டீடெயிலாக செய்யக்கூடியவர். விசுவல் திங்கிங் உள்ளவர். கூடவே கார்டூனிஸ்ட் வேறு.
மனதில் நினைப்பதை வெளிப்படையாக பேசாததே இவரது குறை. (திருப்பூரில் இருந்து நாங்களிருவரும் ஒன்றாகத்தா
ன் நாளைய இயக்குனர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டோம்)

2.ரமேஷ் - நிகழ்ச்சியில் எனக்கு கிடைத்த மிக நெருக்கமான நண்பர்.
இவருடைய ஸ்பெசலே வெளியே யோசிப்பதாக, குழப்பமாக இருப்பதாக சொல்வது (இவர் என்ன செய்யப்போகிறார் என்று முடிவெடுத்துவிட்டு பிறகுதான்!!!? ) பிறகு கடைசியில் தீர்க்கமாக படம் கொடுப்பார். குழப்பமில்லாத ஸ்ராங் மேன்!

3.அருண்குமார் - நான் பார்த்து மிகவும் ரசித்த படங்களை எடுத்த இயக்குனர். அதிகமாக இவருடன் பழகியதில்லை பழகவேண்டுமென்று ஆசைப்படுமளவு இருப்பவர்.
பெரிய ஆளாக வருவார்.
இவரோடு ஒன்றாக நிகழ்ச்சியில் கலந்துகொண்டது பின்னால் பெருமையளிக்கும் விசயமாக இருக்கப்போகிறது பாருங்கள்.

4.கல்யாண் - இவர் சாதாரணமான மனிதரே இல்லை. அசாதாரணமானவர்.
நாங்களெல்லாம் ஒரு படத்தை முடிக்க பணத்தாலும், மனதாலும் சிரமப்பட்டுகொண்டிருக்கும்போது அவை இரண்டையும் சர்வசாதாரணமாக கையால்பவர்.
இனிக்க,இனிக்க பேசும் இனிமையான நண்பர்.
என்றென்றும் இவரோடான நட்பு தொடரவேண்டும் என்று ஆசைப்படுகிறேன்!


5.தீபன் -- எப்போதும் காலில் ஷீவேடும், மழித்த கன்னங்களும், நுனிநாக்கு ஆங்கிலம்,டக் இன் பன்னிக்கொண்டு ஐ.டிஇளைஞராக (உண்மையிலையேயே) வலம் வருபவர். தனக்கெனஒரு சினிமா பாணி வேண்டுமென்பதில் முனைப்புடன் செயலாற்றுபவர். வெற்றி தோல்விகளை சமமாக சந்தித்திருந்தாலும் உற்சாகமாக வலம் வருபவர். nice man!

6.ராகேஷ் -- இவரும் ஒருவகையில் தீபனை போலவே இருப்பார். ஆங்கிலப்படங்களைப்போல ஒரு ஸ்டைல் இவரது படங்களில் தெரியும். ஆரம்ப நாட்களில் இவரோடு பழகாமல் விட்டுவிட்டோமே என்று இப்போது வருந்துகிறேன். உதவிக்கரம் நீட்டுவதில் தயங்காதவர். எனக்கு பிடித்தவர்.

7.ராஜ்குமார் -- இவரை பார்த்து ஆரம்ப நாட்களில் கொஞ்சம் பொறாமைப்பட்டது உண்மை. இவரோடு சேர்த்து நம்மை போட்டிக்கு விட்டுவிடக்கூடாது என்றெல்லாம் நினைத்திருக்கிறேன். இவருக்கென்று ஒரு குழு ஸ்பெசலாக இருக்கிறது. நச்சென்று படம் எடுப்பவர் . இவரோடு சேர்ந்தாற்போல ஐந்துவார்தைகளுக்குமேல் பேசியதில்லை அதுவும் இப்போதுதான். ஆளுமை மிக்கவர்.

8.அழகுராஜ் - -- இவர் நிகழ்ச்சிக்கு உதவி இயக்குநராகவும் இருப்பதால் நான் அதிகம் பேசியது இவரோடுதான். வெளிப்படையான வெகுளியான நல்ல நண்பர்.
எத்தனையோ வேலைகளுக்கு மத்தியில் படம் பண்ணியவர். குடுமி வைத்த மஹிழ்ச்சியான அண்ணன்!

9.தமிழ்சீனு -- இவர் ஹைத்ராபாத்தில் இருந்த்து வந்து நிகழ்ச்சியில் கலந்துகொண்டு செல்பதாலும் என்னவோ இவரோடு சொற்பமாகதான் பேசியிருக்கிறேன். இனிமையானவர். ”மிரட்டலான” மேக்கிங்கில் படம் எடுப்பவர். சவுண்ட் இஞ்சினியராக இருக்கிறார்.

10.நான்

போட்டியாளர்கள் எல்லோரும் ஒரு காலைப்பொழுதில் ஒன்றாக தி நகர் நடேசன் பூங்காவில் அடுத்து இறுதிப்போட்டிக்கு தயாராகும் முன்னோட்டமாக ஒரு ஜாலியான கலந்துரையாடல்

இது தவிர நிகழ்ச்சிக்கு வந்து அறிமுகமாகி என்னோடு பயணித்த
ஒளிப்பதிவாளர்-அரவிந்த், -சங்கர்
இசையமைப்பாளர்-வசந்த்,- பிரபுசங்கர்
எடிட்டர்- மனோஜ்,- ஜோமின்

மற்றும்ஆரம்பகாலம் தொட்டு எனக்கு மனதளவிலும் உற்றநண்பனாக இருக்கும் ”கிராபிக்ஸ்” ஜெகதீசன்

ஆகிய எல்லோருடனும் நீண்டகாலம் பயணிக்க இதுவொரு நல்ல தொடக்கமாக நினைக்கிறேன்!.


இப்போது இறுதிப்போட்டிக்குள் நுழைகிறோம்.
வெற்றிபெற கடுமையாக உழைக்கவேண்டும்.

வெற்றி யாருக்காக இருந்தாலும் காழ்ப்புணர்ச்சியின்றி நட்பு என்றென்றும் தொடரும்...








கருத்துகள்

  1. 10 பேரைப்பற்றியும் அழகிய விமர்சனம் மற்றும் பார்வை அருமை.

    பதிலளிநீக்கு
  2. நான் உங்கள் படங்களின் ரசிகை, வாழ்த்துக்கள்... you are so talented..i admired with your short film "avan avargal athu".. all the very best..your final film of nalaiya iyakkunar "0 kilometer" was very nice.you will definitely win the title of the nalaya iyakkunar..all the very best

    பதிலளிநீக்கு
  3. நன்றி சி.பி.செந்தில்குமார், செந்தமிழ். சமுத்ரா, ஷர்புதின்
    கண்டீப்பாக தொடர்ந்து செயல்படுவோம்

    பதிலளிநீக்கு
  4. வலைச்சரம் மூலம், உங்கள் ப்லாக் பற்றி தெரிந்து கொண்டேன். அருமையாக உள்ளது. வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

பிரபலமான இடுகைகள்