நாளைய இயக்குனர் அரையிருதிப்போட்டியில் எனது படம் “பார்வதியக்கா”
நண்பர்களே கலைஞர் தொலைக்காட்சியின் நாளைய இயக்குனர் நிகழ்ச்சியில் அரையிருதிப்போட்டியில் “கிராமத்து கதைகள்” என்பது தலைப்பு.

“கடலடிப்பிரவாகம்” சிறுகதை எனக்கு பிடித்திருந்தது



கிராமத்துக்கதைகளுக்காக ஏராளமான சிறுகதைகளை படித்து
சோர்ந்ததில் ”சேர்தளம்” நூலகத்தின் உதவியால் “ஜெயந்தனின் கதைகள்”ல் இருந்து படித்த
“கடலடிப்பிரவாகம்” சிறுகதை எனக்கு பிடித்திருந்ததுஅந்த கதையை தழுவி சிலபல மாறுதல்களை செய்து எடுத்த படம்தான் “பார்வதியக்கா”
சத்தியமங்கலத்தில் சிக்கரசம்பாளையத்திலும்
, பெரியகுளத்திலும் மூன்றுநாட்கள் படப்பிடிப்பு நடத்தினோம்.


ஏராளமான நண்பர்களின் உதவியே இந்த
படம் உருவாவதற்கு அடித்தளம்!ஒளிப்பதிவாளர் ஷங்கரின் உழைப்புக்கு படம் நிகழ்ச்சியில் சிறந்த ஒளிப்பதிவிற்கான பரிசை பெற்றது.
படத்தை பாருங்கள் உங்கள் மேலான கருத்துக்களை கூறுங்கள்!
parvathiyakkaa short film

ரொம்ப நல்ல ஒளிப்பதிவு. வாழ்த்துகள்!
பதிலளிநீக்கு