”நாளைய இயக்குனரில்” எனது குறும்படம் “மரண அடி” 30.01.11

நண்பர்களே நாளைய இயக்குனர் நிகழ்ச்சியில் இரண்டாவது போட்டி சுற்றுக்கான எனது பிரிவு “எழுத்தாளர்களின் சிறுகதையை அடிப்படையாக கொண்ட படம்” அதற்காக நான் எடுத்த படம் “மரண அடி”. எழுத்தாளர் ச.அறிவழகன்.

எழுத்தாளர் சிறுகதை என்றவுடன் எளிதாக ஏதேனுமொரு கதையை எடுத்துவிடலாமென்றென்னியிருந்தது தவறு என்று புரிய பத்து நாள் ஆனது.
பெரும் குழப்பம் பிடித்து ஆட்டியது. இறுதியாக எஸ்.சங்கரநாராயணன் சார் அவர்கள் எழுத்தாளர் ச.அறிவழகன் அவர்களின் மரண அடி சிறுகதையை பரிந்துரைத்தார். எனக்கு அந்த கதையிலும் பிடிப்பு ஏற்படாதிருந்தபோது நலன் சார் அவர்கள் உறுதியாக ”இந்த கதையை எடு ரவி” என்றார்.
கதையை பரிந்துரைத்த எஸ்.சங்கரநாராயணன் சார் அவர்களே எழுத்தாளர் ச.அறிவழகன் அவர்களை 10ஆண்டுகளாக சந்திக்க இயலாமல் இருந்தார். முகவரி மாறியதால் தொடர்பும், தொடர்பு எண்னும் விடுபட்டு போயிருந்தது.
இந்த கதையை படமாக்க எழுத்தாளர் ச.அறிவழகன் அவரிடம் அனுமதி வாங்கவேண்டி நான் முயர்ச்சித்து அவரது தொடர்பை கண்டுபிடித்தேன். தோழர் ராமு அவர்கள்தான் அதற்கு உதவினார். அவருக்கு நன்றி! டப்பிடிப்புக்கு முந்தைய நாள்தான் கதையின் எழுத்துப்பிரதி கிடைத்தது.

கதையில் எனக்கு ஏற்றாற்போல மாற்றியமைத்து படமாக்கினேன்.

படப்பிடிப்பு ஒருநாளிலே முடிந்தது. கிராபிக்ஸ் வேலைகள் மட்டும் 15நாள் பிடித்தது. படத்தில் எரியும் நெருப்பு 60% கிராபிக்ஸ்தான். பிணம் எழுவதும், முகத்தில் ஊறும் ஈயும் கிராபிக்ஸ்ல்தான் போட்டோம். கிராபிக்ஸ் ஜெகதீஸ். படத்தில் வெட்டியாணாக நடித்த தோழர் ராமு அவர்கள் ஏற்கனவே “பூ” படத்தில் பேனாக்காரராக நடித்திருக்கிறார். மகனாக நடித்த ரமேஷ் சென்னை சூரியன் எப்.எம்,இல் ரேடியோ ஜாக்கியாய இருக்கிறார்.

கிராபிக்ஸ்- ஜெகதீஸ் 9994506013
ஒளிப்பதிவு-அரவிந்குமார் 9894593945
இசை-வசந்த் 9600883888
படத்தொகுப்பு-ராம் 9843788198
இயக்கம்-ரவிக்குமார் 9894982525

பார்த்துவிட்டு உங்கள்
மேலான கருத்துக்களை கூறுங்கள்!

">மரண அடி


தொலைக்காட்சி நிகழ்ச்சி முழுதும்.

">பகுதி-1

">பகுதி-2

">பகுதி-3

">பகுதி-4

கருத்துகள்

கருத்துரையிடுக

பிரபலமான இடுகைகள்