திங்கள், 14 மார்ச், 2011

”நாளைய இயக்குனரில்” எனது குறும்படம் “பசி” 13.03.11

நண்பர்களே நாளைய இயக்குனர் நிகழ்ச்சியில் கால் இறுதிக்குமுந்தைய ”டிராஜிடி சுற்றில்” ஒளிபரப்பான எனது குறும்படம் “பசி”. இக்குறும்படம் எழுத்தாளர் கே.ராஜாராம் அவர்களின் பசி சிறுகதையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டது.
சோகமான கதை என்றவுடன் சிறுகதை புத்தகங்களை அடுக்கடுக்காக புரட்டியதில் சோகமே மிஞ்சியது.
எனது குறும்பட ஆக்கத்திற்கு தேவையானற்போல் எதும் அமையவில்லை.
நண்பர் பக்ருதீன் கே.ராஜாராம் அவர்களின் இந்த கதையை கூறினார்.பளிச் என்று இருந்த ஒரு ஐடியா எனக்குபிடித்திருந்தது.
படப்பிடிப்பிற்காக ஒரு தொடக்கப்பள்ளியில் அனுமதிகேட்டு போக அந்த அனுமதிவால் நீண்டுகொண்டேபோய் சென்னையில் நின்றது.


இனி முடியாது வேறுகதை எடுத்துக்கொள்ளலாம் என்றிருந்தபோது ஆபத்பாந்தனாய் உதவினார் படத்தின் கேமராமேன் ஷங்கர். அவரது ஊரான சத்தியமங்கலத்தில் படத்தை முடித்தோம்.

படத்தை பாருங்கள் உங்கள் மேலான விமர்சனத்தை பதிவு செய்யுங்கள்.
நன்றி!

">குறும்படம்



தொலைக்காட்சி நிகழ்ச்சி ">பகுதி1

">பகுதி2

0 comments:

கருத்துரையிடுக