நான் ஒரு நட்பு விரும்பி

எல்லோருக்குமே மிக இனிமயான பொழுது நண்பர்களோடு களித்ததாகத்தான் இருக்கும். சிலருக்கு நண்பர்கள் நண்பன் என்ற அளவு என்று சுருங்கி இருக்கலாம். எனக்கு அளவான நண்பர்கள்தாம்.
எதிர்ப்படும் எல்லோருமே நண்பர்களாகவே இருக்கிறார்கள். ரொம்பவும் சுலபமானது நண்பர்களை பெறுவதென்றாலும்,ரொம்பவும் கஷ்டமானது நல்ல நண்பர்களை பெறுவதுதாம். அந்த வகையில் நான் கொடுத்துவைத்தவன்தான்.

பள்ளி,கல்லூரி, பணிநிமிர்த்தம் தாண்டியும் தொடர்ந்துகொண்டிருக்கிறேன். நட்பு வளர்க்க மிக சிறந்த கருவி செல்போன் தான். முகம் காணமலே வருடக்கணக்கில் குரலோடு பழகி பிறிதொரு சமயம் சந்திக்க நேரும்போது அப்பப்பா! எவ்வளவு சிலிர்ப்பானது.

ஒவ்வொரு புது நண்பர்களை பெரும்போதெல்லாம் இவர்களை நான் சந்திக்க ஏன் இவ்வளவு காலம் ஆனதென்று நினைப்பேன். அடிப்படையில் எல்லோருமே நல்ல மனிதர்கள், நல்ல நண்பர்கள்தாம் அவரவர் கருத்துக்களோடு அவர்தம்மை ஏற்றுக்கொள்ளும் போது எந்த பிரச்சனையும் இல்லை. கருத்து திணிப்பு தான் உறவுகளில் சிக்கல்களை எற்படுத்துகிறது.

என் நண்பனிடம் அவனிடம் எனக்கு உறுத்தும் விஷயத்தை நேரிடையாக கூறுவேன் அவன் எற்றுக்கொள்ளாத பட்சத்தில் அந்த உறுத்தும் விஷயத்தால் அவனுக்கு பாதிப்பு எற்பட்டாவண்ணம் நிச்சயம் உடனிருப்பேன்.

காரணமின்றி பிரியும் நண்பனால் கடும் வேதனை.
எதிர்பார்ப்போடுகொள்வது நிச்சயம் நட்பாய் நிலைக்காது என்று உண்ர்ந்துகொண்டேன்.

நண்பர்கள் என் ஆயிட்காலம் முலுவதும் நட்பாய் நீடிக்க சந்தர்ப்பங்களில் நானே இறங்கிவர எனக்கு தயக்கமே இல்லை.

இந்த பதிவுலகம் மூலமாக நண்பர்களையே பெற விரும்புகறேன். இனி என் மகிழ்ச்சியும், நெகிழ்ச்சியும், வருத்தமும், துக்கமும் உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன். ஏற்றுக்கொள்ளுங்கள் என்னை உங்கள் நண்பனாக.....

கருத்துகள்

  1. ரவி உங்களின் இந்த புதிய வருகை பதிவர் உலகுக்கு நல்ல பல தகவல்களையும் அரிய கருத்துக்களையும் ஈணுவதாக இருக்க என் வாழ்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. நிச்சயம் உங்கள் இனிய மனதுக்கு நல்ல நண்பர்கள் கிடைப்பார்கள்.. மேலும் பல நண்பர்கள் கிடைக்க வாழ்த்துக்கள்.. நிறைய எழுத்து பிழை உள்ளது. சரி பார்க்கவும்.. நன்றி..

    பதிலளிநீக்கு
  3. பின்னல் நகர நண்பருக்கு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  4. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  5. முதல் பதிவு. நல்ல கருத்து. தொடருங்கள்.
    நட்பே ஜெய்க்கட்டும்..

    பதிலளிநீக்கு
  6. நன்றி அஜயன் பாலா சார்!

    கேபிள் அண்ணா ரொம்ப நன்றி.

    நன்றி ஸ்ரீகிருஷ்ணா!

    நன்றி ராமசாமி

    பதிலளிநீக்கு
  7. வாழ்த்துக்கள் ரவிக்குமார்!

    உங்கள் வலைத்தள முகவரியை திருப்பூர் வலைப்பதிவர்கள் திரட்டியில் இணைத்துள்ளேன்.
    http://tiruppur-bloggers.blogspot.com/

    பதிலளிநீக்கு
  8. உங்கள் விருப்பம்போல் நட்புவட்டம் வளர்வதாக

    வாழ்த்துகள் இரவி

    தயங்காமல் எழுதுங்கள் உங்கள் எண்ணங்களை....

    பதிலளிநீக்கு
  9. வாங்க, வாங்க....:)

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

பிரபலமான இடுகைகள்